புதுச்சேரி மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி; புதுச்சேரியில் புதியதாக வாங்கப்பட்டமின்சார ஏ.சி., பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி பி.ஆர்.டி.சி., மூலம், 25 மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் தாவரவியல் பூங்கா எதிரே 1.5 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக வாங்கப்பட்ட 5 மின்சார ஏ.சி., பஸ் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட இந்த பஸ்சில் 36 பேர் பயணம் செய்யலாம்.

இந்த பஸ்களை இயக்க புதிய டிரைவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பஸ்சை எப்படி இயக்குவது, பராமரிப்பு, சார்ஜிங் போடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement