108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையம் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அவசர சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட 108 சேவை கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் ரங்கசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஸ்மார்ட் போன்கள், டேப்லெட் மற்றும் ரெயின்கோட் உள்ளிட்டவை வழங்கினார். மேலும், அவசர உதவி செயல்பட்டை மேம்படுத்த ஐ.சி.எம்.ஆர்., ஜிப்மர் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலியை துவக்கி வைத்தார்.

இதில், சுகாதாரத்துறை செயலர் ஜெயந்த குமார் ரே, ஜிப்மர் இயக்குநர் விர் சிங் நேகி, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குநர் கோவிந்தராஜன், ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லியின் விஞ்ஞானி மீனாட்சி சர்மா காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

இதற்கிடையே, இந்தியா - இ.எம்.எஸ்., குழு, மாநில அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டிஸ்பேட்ச் முறை, புதுச்சேரி முழுதும் நோயாளிகளுக்கு சம்பவ இடத்தில் வழங்கப்படும் முதலுதவி மற்றும் வழியில் கவனிப்பு தரத்தை மேம்படுத்தும், அவசர மருத்துவ சூழ்நிலைகளின் திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement