வைகோவுக்கு வாய்ப்பு தராதது வருத்தமே

1

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் பணியாற்றியவர். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத நேரத்தில், தனிநபர் மசோதா கொண்டு வந்தவர். தனது எம்.பி., பதவி முடியும் தருவாயில், 81 வயதில் கூட, மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசியவர். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு தேடி வந்தபோதும் மறுத்தவர்.

அப்படிப்பட்டவருக்கு மீண்டும் எம்.பி., பதவிக்கான வாய்ப்பு கிடைக்காதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. தமிழக நலன் கருதி இதை கடந்து செல்வோம். தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்.

Advertisement