சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்

8

பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரத தேசம் ரிஷிகளாலும், துறவிகளாலும், சனாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போதெல்லாம், நம் நாடு சரிந்து விழாமல் நிமிர்ந்து நின்றதற்கு காரணம் சனாதன தர்மம்.

உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் கேந்திரமாக நம் நாடு திகழ்கிறது.

மனிதகுலம் தழைக்க, ஆன்மீகம் தழைக்க வேண்டும். திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கின்றனர்.

சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.

- ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர்

Advertisement