கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார்:வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடலுார் துறைமுகத்தில் துார புயல் சின்னத்தை குறிக்கும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கி 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தாண்டு கோடையில் தொடர் மழையாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தரைக்காற்று 40 கி.மீ., வேகத்தில் வீசுகிறது. வங்கக் கடலில் துாரத்தில் புயல் இருப்பதை குறிக்கும் வகையில் கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவி தரவில்லை; ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை கொல்ல முயன்ற இணை ஆணையர்
-
ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை
-
சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்
-
ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு
-
வைகோவுக்கு வாய்ப்பு தராதது வருத்தமே
-
'சீட்' கேட்காததால் ஏமாற்றம் இல்லை
Advertisement
Advertisement