சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
கடலுார்: கடலுாரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சம்மந்தம் மகன் கார்த்திகேயன்,30; இவர் கடந்த அக்டோபர் மாதம் 17 வயது சிறுமி திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இந்நிலையில், சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற போது, கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கடலுார் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புகாரின் பேரில், கார்த்திகேயன், இவரது அவரது தந்தை, தாய் உள்ளிட்ட மூன்று பேர் மீது குழந்தை திருமண தடை சட்டம், 'போக்சோ' ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவி தரவில்லை; ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை கொல்ல முயன்ற இணை ஆணையர்
-
ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை
-
சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்
-
ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு
-
வைகோவுக்கு வாய்ப்பு தராதது வருத்தமே
-
'சீட்' கேட்காததால் ஏமாற்றம் இல்லை
Advertisement
Advertisement