அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்

லக்னோ: அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
@1br@உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போது, அந்த நடவடிக்கை தொடரும். அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அதற்கு அஞ்ச மாட்டோம். இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதலால் பேரழிவிற்கு உள்ளான பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது.




ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியை உலகம் கண்டுள்ளது. நமது இந்திய ஆயுதங்களும் பிரம்மோஸ் ஏவுகணையும் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இலக்குகள் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
எதிரி எங்கிருந்தாலும், அவன் விரட்டியடிக்கப்படுவான்.
தூக்கம் இல்லாத இரவுகள்
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிரிக்கு தூக்கமில்லாத இரவுகளை பிரம்மோஸ் ஏவுகணை கொடுத்தது.
வேலைக்கு ஆகாது
பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு சாராதவர்களின் சூழ்ச்சி இனி வேலை செய்யப் போவதில்லை. பாதுகாப்புத் துறையில் பெரிய நிறுவனங்கள் உ.பி.க்கு வருகின்றன. AK203 துப்பாக்கி உற்பத்தி அமேதியில் தொடங்கியது.
பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில், கான்பூரின் மகன் சுபம் திவேதியும் தனது உயிரை இழந்தார். மகள் ஐஷான்யாவின் வலியையும் கோபத்தையும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஆறுதல் தெரிவித்தார் பிரதமர்!
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேசம் சென்றுள்ள மோடி, விமான நிலையத்தில் அவர்களை சந்தித்து பேசினார். "இது மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பு" என்று சுபமின் உறவினர் சவுரப் திவேதி கூறினார்.
வாசகர் கருத்து (12)
ஜிதீஷ் - ,
31 மே,2025 - 10:07 Report Abuse

0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
30 மே,2025 - 20:03 Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
30 மே,2025 - 20:28Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
30 மே,2025 - 20:48Report Abuse

0
0
vivek - ,
30 மே,2025 - 21:30Report Abuse

0
0
Reply
madhesh varan - ,இந்தியா
30 மே,2025 - 17:40 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
30 மே,2025 - 19:03Report Abuse

0
0
Narayanan Muthu - chennai,இந்தியா
30 மே,2025 - 19:57Report Abuse

0
0
சந்திரசேகரன்,துறையூர் - ,
30 மே,2025 - 20:14Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
30 மே,2025 - 20:44Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
30 மே,2025 - 17:32 Report Abuse

0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
30 மே,2025 - 17:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
-
கொரோனாவால் அச்சம் வேண்டாம் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அறிவுரை
-
ஞான முத்தாலம்மன் கோவிலில் செடல்
-
தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட மாணவர் தேர்வெழுத அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
-
முன்விரோதத்தில் 3 பேருக்கு வெட்டு
-
திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Advertisement
Advertisement