இடுக்கி போலீசார் எச்சரிக்கை

கூடலுார்: இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏலத்தோட்டங்கள் மற்றும் வயல்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நில உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குமுளி போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement