பைனான்சியர் மீது கந்துவட்டி வழக்கு
தேனி: வீரபாண்டி தர்மாபுரி தெற்குத்தெரு சுருளியப்பன் 56. பசுமாடுகள் வளர்த்து பால் விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் பூமலைக்குணடுவை சேர்ந்த கருப்பையா அறிமுகமானார்.
இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும், கறவை மாடுகளை வாங்கி 2 பைசா வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன் எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய சுருளியப்பன், தொழில் அபிவிருத்திக்காக குறைந்த வட்டியில் கருப்பையாவிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றார்.
இதற்காக ரூ.10 ஆயிரம் வட்டியும், ரூ.20 ஆயிரம் அசல் தொகை என கருப்பையா கூறியதால் மூன்று ஆண்டுகளாக (36 மாதங்கள்) ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் திரும்பி வழங்கியுள்ளார்.
அதன் பின்பும், கருப்பையா ரூ.10 வட்டிக்குதான் கடன் கொடுத்தேன் எனக்கூறி சுருளியப்பன் ரூ.15 லட்சம் வழங்க கூறி கொலை மிரட்டல் விடுத்து, அடிக்கடி வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி அவமானப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட சுருளியப்பன் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் அளித்த புகாரினை தொடர்ந்து வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர், கருப்பையா மீது கந்துவட்டி தடுப்பு சட்டம், கொலைமிரட்டல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
ராமதாஸ் அன்புமணி மோதல்: பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்?
-
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் வெடிக்கும் தி.மு.க., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சம்: 6 மாதமாக பணி மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
-
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 2 கார்கள் பறிமுதல்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம்
-
பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை