அறிவிப்பில்லாத மின்வெட்டால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
கடம்பத்துார், மே 31-
கடம்பத்துாரில் அமைந்துள்ள துணைமின் நிலையம் வாயிலாக கடம்பத்துார், புதுமாவிலங்கை, பிரையாங்குப்பம், காரணி உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் கடம்பத்துார், பிரையாங்குப்பம், காரணி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், தினமும் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் மின் வினியோகம் தடைபடுகிறது. இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமன, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடம்பத்துார் மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
சில நாட்களாக பலத்த காற்று வீசி, அவ்வப்போது மழை பெய்ததால், மின்கம்பிகள் உராய்வு ஏற்பட்டதில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.
ரமின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொணடனர்.
வரும் காலங்களில் மின்தடை ஏற்படும் போது, மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தால், உடனடியாக மின்வெட்டு சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்