46 அரசு பள்ளிகளுக்கு அரசு 'வெரிகுட்' சான்றிதழ்
கோவை; கோவை வருவாய் மாவட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற 46 பள்ளிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அதனைச் சாதிக்க உதவிய ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்பேரில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, கோவை வருவாய் மாவட்டத்தில், 46 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 23 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். 10ம் வகுப்பில் 34 உயர்நிலை மற்றும் 12 மேல்நிலைப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் மேற்கொண்ட திட்டமிடல், புத்தாக்க முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்படுத்தல் போன்ற செயல்பாடுகளுக்காக, இந்த பாராட்டுச் சான்றிதழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்காக, கோவை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த, 1,568 பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 575 பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும்
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
-
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி