ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,

புதுடில்லி: டில்லியில் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறையின் உயரதிகாரி உள்பட 2 பேரை சி.பி.ஐ., கைது செய்து விசாரித்து வருகிறது.
டில்லியை அடுத்துள்ள வசந்த் கஞ்ச் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்ககத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருபவர் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அமித் குமார் சிங்கால்.
இவர், தனிநபர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.45 லட்சம் ரொக்கத்தை சம்பந்தப்பட்டவரிடம் அமித் குமார் லஞ்சமாக கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காவிட்டால், கடுமையானடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
லஞ்சத் தொகையின் முன்பணம் ரூ.25 லட்சத்தை,மொகாலியில் உள்ள அமித் குமாரின் உதவியாளரான ஹர்ஷ் கொட்டக் என்பவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஹர்ஷை கைது செய்ததுடன், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதே சமயத்தில் டில்லியில் வைத்து வருமான வரித்துறை உயரதிகாரி அமித் குமாரையும் சி.பி.ஐ., அதிகாரிகளின் மற்றொரு குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.









மேலும்
-
'தக் லைப்' படம் திரையிட அனுமதி கோரி வழக்கு! கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல் மனு
-
விராட் கோலி பார் மீது வழக்கு
-
அடுத்தடுத்து யானைகள் இறப்பது ஏன்? விசாரணைக்கு வனத்துறை உத்தரவு
-
5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு
-
அரசு மருத்துவமனைகள் மீது 'வாட்ஸாப்'பில் புகாரளிக்கலாம்
-
ஜே.இ.இ., தேர்வு முடிவு: முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை