சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு
கோவை; கேரள வனப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கன மழை தொடர்வதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்கிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 65 மி.மீ., அடிவாரத்தில் 46 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதனால், 37.10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 7.58 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு:
கோவை வேளாண் பல்கலை - 7.60 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் - 3, மேட்டுப்பாளையம் - 2, பில்லுார் அணை - 7, கோவை தெற்கு - 11, சூலுார் - 2.40, வாரப்பட்டி - 5, தொண்டாமுத்துார் - 12.40, மதுக்கரை - 6.50, போத்தனுார் - 11.60, பொள்ளாச்சி - 31.40, மாக்கினாம்பட்டி - 37, கிணத்துக்கடவு - 10, ஆனைமலை - 19, ஆழியாறு - 9.80, சின்கோனா - 103, சின்னக்கல்லார் - 126, வால்பாறை - 114 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
மேலும்
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
-
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி