கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு
கோவை; கோவையில் கோர்ட் கோடைவிடுமுறை நாட்களில், ஜாமின் மற்றும் முன்ஜாமின் தொடர்பாக, 330 மனுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு, மே 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் முன்சிப் கோர்ட்கள் செயல்படவில்லை.
அனைத்து மாஜிஸ்திரேட் மற்றும் சிறப்பு கோர்ட்கள் செயல்பட்டன.
கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், கோடை விடுமுறையில் ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் மீது, நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
கிரிமினல் வழக்குகளில், மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பைலிங் செய்யப்பட்ட மனுக்கள் முறையே, 8, 15, 22, மற்றும் 29 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
ஜாமின் மற்றும் முன்ஜாமின் தொடர்பாக மொத்தம், 344 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், இரு தரப்பு விசாரணை நடத்தப்பட்டு, 330 மனுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
-
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி