பள்ளிகளில் பாதுகாப்பு இந்து மக்கள் கட்சி மனு

பண்ருட்டி : பண்ருட்டி தாலுகா பகுதியில் பள்ளிகளின் கட்டட தன்மை குறித்த ஆய்வு செய்ய வேண்டுமென, இந்துமக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி தாசில்தார் பிரகாஷிடம் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா அளித்த மனு:

கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில் பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு தனியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement