வேளாங்கண்ணி மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, தேர்பவனியில் பங்கேற்றனர்.
நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய மாதா கோவிலில், தஞ்சை மறைமாவட்ட பிஷப் சகாயராஜ் தலைமையில்,25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலிக்கு பின், மின்னொளியில் ஜொலித்த தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய மாதாவிற்கு, வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான மகுடம் சூட்டப்பட்டது.
தொடர்ந்து திருத்தேர் பவனி, புனித பாதை வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, திருத்தேரின் மீது பூக்களை துாவி பங்கேற்றனர்.
புகைப்படம் மெயிலில் சார்.
மேலும்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்