தென்னிந்திய நடிகர் சங்கம் கமல் பேச்சுக்கு ஆதரவு
சென்னை: கமல் பேசிய பேச்சு, கர்நாடகாவில் சர்ச்சையான நிலையில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
நடிகர் சங்கம் அறிக்கை:
அந்த நெகிழ்ச்சியின் தாக்கம் குறையாமல், அடுத்து மேடையேறிய கமல் பேசுகையில், ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவரது குடும்பத்தில் அவருக்கு பின், தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தி பேசினார்.
பேரன்பு
சிவராஜ்குமார் அந்த குடும்பத்தில் தனக்கு பின் வந்த இளையவர் என்பதை, பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, 'அவர் குடும்பத்தில் தமிழனான எனக்கு பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார்' என்ற பொருள்பட பேசினார்.
சிவராஜ்குமார் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில், கமல் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு, குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல், அந்த தவறான புரிதலை, வேகமாக பரப்பியும் வருகின்றனர்.
அது, தேவையற்ற சங்கடமான சூழலையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கமல், கன்னட மொழிக்கு எதிரானவர் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை சித்தரித்து, அவதுாறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.
சூழ்ச்சி
சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர், நடிகர் கமலை கருவியாக பயன்படுத்தி, கன்னட,- தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத்தவறான முன்உதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்பு புள்ளியாகவும் நிலைத்துவிடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கமல் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, திட்டமிட்டு பரப்பப்படும் அவதுாறுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு