விரிசல் மின் கம்பத்தால் ஆபத்து

கோபி: கோபி நகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட சிவசண்முகம் இரண்டாவது வீதியில், 50 வீடுகள் உள்ளது. இப்பகுதியில் இரு மின்கம்பங்களில், ஒரு கம்பத்தின் அடிப்பகுதி முதல் உச்சி வரை, கான்கிரீட் உதிர்ந்து, விரிசல் விழுந்து படுமோசமாக, சாய்ந்த நிலையில் உள்ளது.

தற்போது மழைக்காலமாக இருப்பதால், கம்பத்தால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. விபத்து நடக்கும் முன், மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement