மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலக பணியாளர் முத்துக்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மேட்டு மருதுாரில் கல்பாலம் காட்டு வாரி வலது கரையில், புதிய தார்ச்சாலை அமைத்தல், பணிக்கம்பட்டி அண்ணாதுரை குளம் முதல் டவுன் பஞ்., எல்லை வரை புதிய தார்ச்சாலை அமைத்தல் மற்றும் கூடலுாரில் துவக்கப்பள்ளியில் புதியதாக நான்கு கழிப்பிடம் கட்ட, 12 லட்சம் ரூபாய், ஆதிநத்தம் நடுநிலைப்பள்ளியில் எட்டு கழிப்பிடம் கட்ட, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement