மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அலுவலக பணியாளர் முத்துக்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மேட்டு மருதுாரில் கல்பாலம் காட்டு வாரி வலது கரையில், புதிய தார்ச்சாலை அமைத்தல், பணிக்கம்பட்டி அண்ணாதுரை குளம் முதல் டவுன் பஞ்., எல்லை வரை புதிய தார்ச்சாலை அமைத்தல் மற்றும் கூடலுாரில் துவக்கப்பள்ளியில் புதியதாக நான்கு கழிப்பிடம் கட்ட, 12 லட்சம் ரூபாய், ஆதிநத்தம் நடுநிலைப்பள்ளியில் எட்டு கழிப்பிடம் கட்ட, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement