உலகப் புகழ் பெற்ற டெரகோட்டா வீரர் சிலைகள் உடைப்பு; அத்துமீறிய சீனர் கைது

பீஜிங்: உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா வீரர் சிலைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் சீனர் ஒருவர் அத்துமீறி புகுந்து, 2 சிலைகளை உடைத்து விட்டார். அவரை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.
டெரகோட்டா வீரர்கள் அருங்காட்சியகம் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகரில் அமைந்துள்ளது. முதல் சீனப் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் கல்லறையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், நம்பிக்கை அடிப்படையில் இந்த வீரர்களின் சிலைகள் உருவாக்கப்பட்டன.
மண்ணில் புதைந்திருந்த இந்த சிலைகள் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
இந்த அருங்காட்சியகத்துக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் சீனர் ஒருவர் அத்துமீறி புகுந்து, 2 சிலைகளை உடைத்து விட்டார். அவரை சீன போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கு 30 என்பது விசாரணையில் தெரியவந்தது.
பாதுகாப்பு வேலிகளை அடித்து நொறுக்கி விட்டு உள்ளே நுழைந்த நபரிடம் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அந்த நபர் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.






மேலும்
-
பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டி: மும்பை அணி பேட்டிங்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது