ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சை: புனே சட்டக்கல்லூரி மாணவி கைது

புனே: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது அவமதிப்பு கருத்துகளை தெரிவித்ததாக புனேயைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை, கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.
புனேயை சேர்ந்தவர் ஷர்மிஸ்தா பனோலி. சட்டக்கல்லூரி மாணவி. இவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது, பாலிவுட் நடிகர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததாகவும், குறிப்பிட்ட மதம் தொடர்பாக இழிவான கருத்துகளை தெரிவித்ததாகவும் கோல்கட்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது கோல்கட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த பதிவு சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து, அவர் அதனை நீக்கிவிட்டார். அதற்காக மன்னிப்பு கேட்டும் அறிக்கை வெளியிட்டார்.
வழக்குப்பதிவானதை தொடர்ந்து, ஷர்மிஸ்தா பனோலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகினர். போலீசார் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து ஹரியானா மாநிலம் குருகிராமில் வைத்து கோல்கட்டா போலீசார் கைது செய்தனர். அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்
-
வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!
-
சுழற்றி வீசிய புழுதிப்புயல்; தரையிறங்க முடியாமல் தவித்த இண்டிகோ விமானம்
-
எரிசாம்பல் கற்களால் கட்டப்பட்ட வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும்!
-
சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!
-
தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு; சர்வதேச நிலவரத்தால் தாக்கம்
-
காலை சிற்றுண்டியில் உப்புமாவிற்குபதில் சாம்பாருடன் வெண் பொங்கல்; இன்று முதல் 'மெனுவில்' மாற்றம்