கால்பந்து: இந்தியா ஏமாற்றம் உஸ்பெகிஸ்தான்

பெங்களூரு: நட்பு கால்பந்தில் இந்திய பெண்கள் அணி 0-1 என உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்தது.
இந்திய பெண்கள் கால்பந்து அணி உலகத் தரவரிசையில் 66 வது இடத்திலுள்ளது. 48 வது இடத்திலுள்ள வலிமையான உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டி கொண்ட நட்பு கால்பந்தில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெங்களூருவில் நடந்தது. முதல் பாதியில் மணிஷா, மாளவிகா, இரண்டாவது பாதியில் பிரியதர்ஷினி என மூன்று வீராங்கனைகள் இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.
முதல் பாதியில் கிடைத்த பல கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள் வீணடித்தனர். முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் உஸ்பெகிஸ்தான் அணியின் தியோரஹான், 56 வது நிமிடம் ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!
-
சுழற்றி வீசிய புழுதிப்புயல்; தரையிறங்க முடியாமல் தவித்த இண்டிகோ விமானம்
-
எரிசாம்பல் கற்களால் கட்டப்பட்ட வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும்!
-
சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!
-
தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு; சர்வதேச நிலவரத்தால் தாக்கம்
-
காலை சிற்றுண்டியில் உப்புமாவிற்குபதில் சாம்பாருடன் வெண் பொங்கல்; இன்று முதல் 'மெனுவில்' மாற்றம்
Advertisement
Advertisement