போலீசாரின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி நிறைவு
சேலம், சேலம் மாவட்ட போலீஸ் சார்பில், குமார
சாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 5 முதல், 18 வயதுடைய போலீசாரின் குழந்தைகள், மக்களின் குழந்தைகள் என, 100க்கும் மேற்பட்டோருக்கு, கடந்த மே, 1 முதல், கோடைகால
இலவச பயிற்சி முகாம் நடந்தது.
தினமும் காலை, 6:30 முதல், 8:30 மணி வரை உடற்பயிற்சி, தடகளம், சிலம்பம், ஓட்டம், கராத்தே, யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், பரிசு வழங்கி பாராட்டினார். பயிற்சி ஏற்பாடுகளை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராம்ராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.ஐ., காமராஜ் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026ல் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!
-
கருணாநிதி பிறந்த நாளில் அவரது ஆணை நிறைவேறுமா ?
-
கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியது; தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலி
-
அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து
-
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கூரை இடிந்தது; நோயாளிகள் தப்பினர்
Advertisement
Advertisement