போலீசாரின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி நிறைவு

சேலம், சேலம் மாவட்ட போலீஸ் சார்பில், குமார
சாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 5 முதல், 18 வயதுடைய போலீசாரின் குழந்தைகள், மக்களின் குழந்தைகள் என, 100க்கும் மேற்பட்டோருக்கு, கடந்த மே, 1 முதல், கோடைகால

இலவச பயிற்சி முகாம் நடந்தது.

தினமும் காலை, 6:30 முதல், 8:30 மணி வரை உடற்பயிற்சி, தடகளம், சிலம்பம், ஓட்டம், கராத்தே, யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், பரிசு வழங்கி பாராட்டினார். பயிற்சி ஏற்பாடுகளை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராம்ராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.ஐ., காமராஜ் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.

Advertisement