கருணாநிதி பிறந்த நாளில் அவரது ஆணை நிறைவேறுமா ?

2

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளயிட்டுள்ள அறிக்கை;
நாளை ( ஜூன் 3 ) கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிறப்பித்த அரசாணையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என அன்று மு.க. ஸ்டாலின் உறுதியளித்து இருந்தார்.
இருப்பினும் புதிய ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும், தங்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.


கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். அவருக்கு சிலை வைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலைக்கு பெயர் சூட்டப்படும், கிண்டியில் கருணாநிதி பெயரில் மருத்துவமனை, என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த வரிசையில் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்டு, நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணை 354 க்கு உயிர் கொடுக்கும் வகையில், அதை உடனே செயல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் செய்யவில்லை. உயிர்காக்கும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுப்பதோடு, அரசு மருத்துவர்களை தொடர்ந்து வேதனைப்பட வைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்பது தான் வருத்தமான உண்மை.

இந்த ஆண்டாவது கருணாநிதி பிறந்த நாள் பரிசாக, அரசு மருத்துவர்களுக்க தன் தந்தையின் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

பாதயாத்திரை





கோரிக்கையை நிறைவேற்ற முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் ஜூன் 11 மேட்டூர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் இருந்து சென்னை கருணாநிதி நினைவிடம் வரை பாதயாத்திரை செல்ல இருக்கிறோம். அதற்கு முன்னதாகவே கோரிக்கையை நிறைவேற்றிட தமிழக முதல்வர் அவர்களை வேண்டுகிறோம்.


இவ்வாறு டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.

Advertisement