உகாண்டா நாட்டு பெண்கள் அவிநாசி அருகே 2 பேர் கைது

அவிநாசி: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவராயம்பாளையம் ஜே.ஜே., நகர் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அதில், உகாண்டா நாட்டின், கம்பாலா பகுதியைச் சேர்ந்த நாகன்வகி ஆயிஷா, 31, எவ்லின் டினா, 34, ஆகிய இரு பெண்கள் விசா காலம் முடிந்தும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. இருவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவிநாசி போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களை அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து (2)
Dhanalakshmi Subramaniyan - ,இந்தியா
01 ஜூன்,2025 - 21:00 Report Abuse

0
0
Reply
rajashegaran - doha,இந்தியா
01 ஜூன்,2025 - 08:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
Advertisement
Advertisement