பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்

சென்னை:பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



கடந்தாண்டு, பூவிருந்தவல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டுக்கு என துரித போக்குவரத்து அமைப்பை பரிந்துரை செய்ய விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் தோராயமாக 43.63 கி.மீ., நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.


முதல்கட்டமாக, பூவிருந்தவல்லி-சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைப்பற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement