மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ்

திருப்பூர் : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் அமுதா, 39. இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு, எட்டு ஆண்டுகளாக உறவினரான தவமணி, 41, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏப்., 18ம் தேதி அமுதா மாயமானார்.
புகாரின்படி, உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
விசாரணையில், அமுதா மாயமான குறிப்பிட்ட நாட்களில், தவமணி திருப்பூரில் இருந்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உசிலம்பட்டி போலீசார் விசாரித்ததில், அமுதாவை கொலை செய்து, திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் கரையில் உடலை புதைத்ததாக, அவர் தெரிவித்தார்.
இதனால், தனிப்படை போலீசார் தவமணியை திருப்பூருக்கு அழைத்து வந்து, தீயணைப்பு துறையினர் உதவியோடு சடலத்தை தேடினர். ஏறத்தாழ, 5 கி.மீ., துாரம் நொய்யல் ஆற்றங்கரையோர பகுதியில் தேடினர். ஆனால், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதற்கான எவ்வித தடயமும் தென்படவில்லை.
போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு