தி கிச்சன் ஸ்டோர் திறப்பு விழா

திருப்பூர் : திருப்பூர் கருணாம்பிகா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை, தி கிச்சன் ஸ்டோர் திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் செயல்படும் கருணாம்பிகா ஸ்டோர், 78 ஆண்டு பாரம்பரியம் கொண்ட பாத்திரக் கடை. இதன் புதிய கிளை, முத்துச்சாமி தெருவில், (நொய்யல் கரை - கஜலட்சுமி தியேட்டர் ரோடு) தி கிச்சன் ஸ்டோர் என்ற பெயரில் திறப்பு விழா நடைபெற்றது.

முதல் விற்பனையை கடை உரிமையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். திருப்பூர் தர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, 30 சதவீதம் வரையிலான சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று (ஜூன் 1ம் தேதி) வரை நடைபெறும்.

பிரத்யேக தயாரிப்புகள், உயர்தரமான பொருட்கள், நவீன கிச்சனுக்கான அனைத்து பொருட்கள், தரம் மற்றும் விலையில் உத்தரவாதம். 78 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நிறுவனத்தின் புதிய கிளை வாடிக்கையாளர்கள் எண்ணத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது என உரிமையாளர் முருகேசன் தெரிவித்தார்.

Advertisement