தனித்து நின்றே தி.மு.க.,வை தோற்கடிப்போம்: சீமான் காமெடி

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தான், தமிழகத்தில் பெரிய கட்சி.
சட்டசபையில் மக்களுக்காக பேசும் எங்களுக்கான குரல் இல்லை. இந்த முறை உறுதியாக சட்டசபைக்குச் செல்வோம். அங்கே எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.
உலகின் முதல் மொழி தமிழ் எனக் கூறிவிட்டு, பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழில் கல்வெட்டு வைக்கவில்லை. தமிழை ஏற்றுக் கொள்ளாத ஈ.வெ.ரா.,வை 'தமிழர் தந்தை' என்கின்றனர். எல்லாமே முரண்பாடாக உள்ளது. நான் யாரை குறிப்பிட்டு சொல்கிேறன் என்பது அனைவருக்கும் புரியும். ராஜ்யசபா தேர்தலில் கமலுக்கு சீட் கொடுத்தது போல், வைகோவுக்கும் கொடுத்திருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்குமான கருத்து வேறுபாடு சரியாகி விடும்.
த.வெ.க., தமிழக அரசியலில் நுழைந்திருப்பதால், எங்களுக்கான ஓட்டு வங்கி குறையாது. தி.மு.க.,வை எதிர்க்க யாருக்கும் சக்தி இல்லை என்பது போல் சொல்கின்றனர்.
ஆனால், நா.த.க., தனித்து நின்றே தி.மு.க.,வை தோற்கடிக்கும். அதனால், எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது கடினம். அப்படியொரு கூட்டணி எங்களுக்கு ஒரு நாளும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு