ரூபாவுக்கு பதவி உயர்வு

பெங்களூரு: ஐ.ஜி.,யாக இருந்த ஐ.பி.எஸ்., ரூபாவுக்கு, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுபவர் ரூபா, 49. தற்போது, கர்நாடக அரசின் பட்டு சந்தைப்படுத்துதல் கழக நிர்வாக இயக்குநராக உள்ளார். ஐ.ஜி., தரவரிசையில் இருந்தார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரியுடன் ஏற்பட்ட மோதலால், மாநில அரசு தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்றும், பதவி உயர்வு வழங்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் ரூபா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, இரண்டு மாதங்களுக்குள் ரூபாவுக்கு பதவி உயர்வு வழங்குவது பற்றி, அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 25ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ரூபாவை, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு செய்து அரசு நேற்று உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை, தற்போது உள்ள பணியில் அவர் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு