தென்காசி நகை கடைக்காரரிடம் ரூ.20 லட்சம் பறித்த 4 பேர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே வடகரையை சேர்ந்த சிந்தாமதார், நகைக்கடை நடத்தி வருகிறார்.
தென்காசியில் பொதிகை அறக்கட்டளை அமைப்பை நடத்தி வரும் கிருஷ்ணன், சிந்தாமதாரிடம், 'வாசுதேவநல்லுார் வங்கியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை, 20 லட்சத்துக்கு அடகு வைத்துள்ளோம். அதை மீட்டால் நீங்கள் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம்' என, கூறினார்.
சிந்தாமதாரும் அந்த நகைகளை மீட்டு விற்கலாம் என்ற ஆசையில், கிருஷ்ணனுடன் வாசுதேவநல்லுார் வங்கிக்கு காரில் சென்றார்.
சிந்தாமதாரை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு அவரிடம், 20 லட்சத்தை பெற்ற கிருஷ்ணன் மற்றும் மூன்று பேர் அங்கிருந்து வங்கிக்குள் செல்லாமல் பணத்துடன் காரில் தப்பி சென்றனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிந்தாமதார், செங்கோட்டை இலத்துார் போலீசில் புகார் செய்தார்.
கேரளாவிற்கு சென்ற கிருஷ்ணன் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்து, 19 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு