"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி

5

சென்னை: "பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சின்ன சின்ன குழப்பங்கள் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். நீங்கள் அது எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். நாம் வேகமாக முன்னேறுவோம்.


பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் கிடையாது. பா.ம.க., ஒரு ஜனநாயக கட்சி. பொதுக் குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம். நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது.நான் தான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை. என்னை நீங்கள் தேர்வு செய்தீர்கள். ஒரு தொண்டனாக செயல்படுகிறேன்.


பா.ம.க., எல்லா மதத்திற்கும் சார்ந்த கட்சி. நம்மிடம் தெளிவான கொள்கை இருக்கிறது. நீங்கள் வேகமாக பண்ணுங்கள். எதுவாக இருந்தாலும் உங்களுடன் நான் இருக்கிறேன். தைரியமாக பண்ணுங்கள். உங்களுக்கு என்னை பத்தி நன்றாக தெரிந்திருக்கும். நான் உங்களுக்கு கட்சியிலும் சரி, வெளியிலும் சரி எந்த பிரச்சனை வந்தாலும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement