"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி

சென்னை: "பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சின்ன சின்ன குழப்பங்கள் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். நீங்கள் அது எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். நாம் வேகமாக முன்னேறுவோம்.
பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் கிடையாது. பா.ம.க., ஒரு ஜனநாயக கட்சி. பொதுக் குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம். நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது.நான் தான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை. என்னை நீங்கள் தேர்வு செய்தீர்கள். ஒரு தொண்டனாக செயல்படுகிறேன்.
பா.ம.க., எல்லா மதத்திற்கும் சார்ந்த கட்சி. நம்மிடம் தெளிவான கொள்கை இருக்கிறது. நீங்கள் வேகமாக பண்ணுங்கள். எதுவாக இருந்தாலும் உங்களுடன் நான் இருக்கிறேன். தைரியமாக பண்ணுங்கள். உங்களுக்கு என்னை பத்தி நன்றாக தெரிந்திருக்கும். நான் உங்களுக்கு கட்சியிலும் சரி, வெளியிலும் சரி எந்த பிரச்சனை வந்தாலும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.
வாசகர் கருத்து (5)
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
01 ஜூன்,2025 - 21:50 Report Abuse

0
0
Reply
Yaro Oruvan - Dubai,இந்தியா
01 ஜூன்,2025 - 20:15 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் தமிழக குன்றியம் - ,
01 ஜூன்,2025 - 17:56 Report Abuse

0
0
Reply
Naresh Kumar - ,
01 ஜூன்,2025 - 17:28 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
01 ஜூன்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்
-
வணிகர் வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராகலாம்
-
தங்கம் விலை ரூ.1,120 உயர்வு
-
குளங்கள் சீரமைக்கும் திட்டம்; ஊரக வளர்ச்சி துறை கைவிரிப்பு
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு 4 ஆண்டில் 2,117 பேருக்கு குண்டாஸ்
-
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க புதிய திட்டம் அமல்
Advertisement
Advertisement