மலர் அலங்காரத்தில் கங்கையம்மன்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், இரவு 12:00 மணிக்கு அம்மன் சிரசு வீதியுலா நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு அம்மன் வர்ணிக்கப்பட்டு கூழ்வார்க்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு உஞ்சி தணிகைவேல் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.

Advertisement