ஐ.பி.எல்., போட்டி வரலாற்றில் 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது பஞ்சாப் அணி

ஆமதாபாத்: பிரீமியர் லீக் 2வது தகுதிச்சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதுயது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 203 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. 204 ரன் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 41 ரன்களுக்கு 87 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுன்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 19 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை, பஞ்சாப் அணி வென்றது.
இறுதிபோட்டிக்கு ஏற்கனவே முன்னேறிய பெங்களூளு அணியுடன் பஞ்சாப் அணி மோத உள்ளது. பிரீமியர் லீக் தொடர் -2025 இறுதிபோட்டி,வரும் 3 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
மேலும்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு