சாம்பியன் ஆப் சாம்பியன் கிரிக்கெட் சேஷாத்ரி எம்.சி.சி., அணி முதலிடம்

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோபு நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் நடந்தன.
போட்டியில், மாவட்டத்திற்கு உட்பட்ட, பல்வேறு டிவிஷன் பிரிவுகளில் வெற்றி பெற்ற எட்டு அணிகள் மோதின. இதில், நேரடியாக காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டுமே நடந்தன.
நேற்று காலை பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடந்த இறுதிப் போட்டியில், ஸ்டாண்டர்ட் அம்பத்துார் மற்றும் சேஷாத்ரி எம்.சி.சி., அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த சேஷாத்ரி அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 188 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் எம்.தினேஷ் வேதாகுரு, 47 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒன்பது சிக்சர் என, மொத்தம் 104 ரன்களை அடித்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் செய்த ஸ்டாண்டர்ட் அம்பத்துார் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 135 ரன்கள் அடித்தது.
இதனால், 53 ரன்கள் வித்தியாசத்தில், சேஷாத்ரி எம்.சி.சி., அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.
மேலும்
-
கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி
-
பிரீமியர் தொடர் பைனல்: பெங்களூரு அணி பேட்டிங்
-
ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு