கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

நபரங்பூர்:ஒடிசா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 பேரை காப்பாற்ற சென்ற ஒருவர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் நந்தஹந்தி தொகுதியில் உள்ள படல்குடா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 10க்கு 10 அடி கழிவு நீர் தொட்டியின் மையப்பலகையை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி கொண்டிருந்தனர். கழிவு நீர் தொட்டிக்குள் முதலில் இரண்டு தொழிலாளர்கள் நுழைந்தனர். அப்போது தான் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே மற்றொரு தொழிலாளி உள்ளே சென்றார் அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த 3 தொழிலாளர்களையும் காப்பாற்ற, அந்த வழியில் வந்த ஒருவர் முயன்றார்.
அவரும் மூச்சு திணறி மயங்கினார். இந்நிலையில் உள்ளூர்வாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு துறையினர் கூறியதாவது:
தகவல் அறிந்து வந்த நாங்கள் நான்கு பேரையும் கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியே எடுத்து, அவர்களை நபரங்பூர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது 3 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காப்பாற்ற வந்த வழிபோக்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தொழிலாளர்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது ஆக்ஸிஜன் ஆதரவு இல்லை என்றும், எந்த பாதுகாப்பும் இல்லாமல் தொட்டிக்குள் நுழைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் எங்களிடம் தெரிவித்த நிலையில், உரிய விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தடயவியல் சோதனைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மரணத்திற்கான சரியான காரணத்தையும் அவர்கள் சுவாசித்த வாயுக்களின் தன்மையையும் வெளிவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
நார்வே செஸ்; முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி
-
பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி
-
திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் ராகுல்; பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
-
டில்லி இல்லத்தில் 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல்!
-
சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்