மேம்பால தடுப்பு சுவரில் போஸ்டர்கள் அகற்றம்

ஆவடி,:சென்ன - திருவள்ளூரை இணைக்கும் வகையில், பட்டாபிராமில் எல்.சி.,கேட் - 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மேம்பாலம் கட்டப்பட்டு, ஒரு வழிப்பாதை கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மேம்பாலத்தில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள் சிலர், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேம்பால தடுப்புச் சுவரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 29ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அங்கு ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும்
-
கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி
-
பிரீமியர் தொடர் பைனல்: பெங்களூரு அணி பேட்டிங்
-
ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு