மாடியில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாப்பான்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மகேந்திரன் மகன் பாஸ்கர், 12; எட்டாம் வகுப்பு மாணவன்.

நேற்று முன்தினம் வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement