பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது

முத்தியால்பேட்டை:பிராட்வேயில் இருந்து திருவொற்றியூர் செல்லும், தடம் எண் 56சி மாநகர பேருந்தில், கடந்த 30ம் தேதி ஓட்டுனராக பாலமுருகன், 51, பணியில் இருந்தார்.

இரவு 9:35 மணியளவில், பிராட்வே, பிரகாசம் சாலை, விநாயகர் கோவில் தெரு சந்திப்பு அருகே பேருந்து வந்தபோது, அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவர், பேருந்தின் இடது புற ஜன்னல் கண்ணாடியை கல்வீசி உடைத்தார்.

ஓட்டுனர் பாலமுருகனையும் அவதுாறாக பேசி மிரட்டி தப்பி சென்றார்.

அவர் அளித்த புகாரின்படி, முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, 19, என்பவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement