அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி

பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்-கான, ஒரு நாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது.


தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், பென்னாகரம் கஸ்துாரிபா காந்தி பாலிக்க வித்யாலயா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிட பள்ளி மற்றும் மகளிர் விடுதி-களில் பணிபுரியும் தலைமை சமையலர்கள் மற்றும் உதவி சமை-யலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது. இம்முகாமில், பென்னாகரம் கணபதி விலாஸ் உரிமையாளர் சண்-முகம் உணவு தயாரிப்பது பற்றி, சமையல் கலை பயிற்சி வழங்-கினார். இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்த-ராமன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பபயிற்சியை பென்னாகரம் என்.எஸ்.சி.பி., உறைவிட பள்-ளியால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Advertisement