பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்-சந்தைக்கு அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் மற்றும் திருப்-பத்துார், திருவண்ணாமலை,
தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபா-ரிகள், 2,000க்கும்
மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஆடுகளை வாங்க திருப்பத்துார், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களிலிருந்து அதிகளவில் மக்கள் வந்தி-ருந்தனர். நேற்றைய வாரச்சந்தையில், பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
அதன்படி, 20 கிலோ எடை கொண்ட ஆடு, 15,000 ரூபாய் முதல், 17,000 ரூபாய் வரையும், 25 கிலோ எடை கொண்ட ஆடு, 18,000 முதல், 20,000 ரூபாய் வரையும் விற்பனையா-னது. அதன்படி மொத்தம், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் வியாபாரம்
நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement