அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது
திருவள்ளூர்:அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம்பக்ஸ் மகன் அஜிஜூல் பக்ஸ் பப்லு, 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும், வீட்டை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அசாம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சிறுமியின் மொபைல் போன் வைத்து ஆராய்ந்ததில், தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அசாம் போலீசார் நேற்று, மப்பேடு போலீசார் உதவியுடன், சிறுமி, அஜிஜூல் பக்ஸ் பப்லுவை மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமியை, பெரியகுப்பத்தில் உள்ள அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
அஜிஜூல் பக்ஸ் பப்லு, இப்பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும், அவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
Advertisement
Advertisement