சந்தைக்கு வரத்து அதிகரிப்பு: வெற்றிலை விலை வீழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடக்கிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி உள்ளிட்ட, 20க்கும் மேற்-பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றி-லையின் ஆரம்ப விலை 4,000 முதல் அதிகபட்சமாக, 10,000 ரூபாய் வரையில் விற்பனையானது. நேற்று நடந்த வாரச்சந்-தையில் ஆரம்ப விலை, 2,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 6,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 4,000 ரூபாய் விலை குறைந்தது.வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 25க்கும் மேற்-பட்ட மூட்டைகள், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.
மேலும்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்