பவானி ஆற்றங்கரையோரம் 'சரக்கு' விற்ற ஆசாமி கைது

பவானி: பவானி, பண்டார அப்பச்சி கோவில் பின்புறம், பவானி ஆற்-றங்கரையோரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்பனை நடப்ப-தாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது,

மது விற்பனை நடப்பது உறுதியானது. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 41, மது விற்றுக் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த, 100 குவா ட்டர் மதுவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இப்பகுதியில் பல மாதங்களாக முறைகேடாக மது விற்பனை நடக்கிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் மாற்றிக்கொள்ளாமல் இருக்க, உள்ளூர் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு, சுரேஷ் மாமுல் கொடுத்து வந்துள்ளார். இதனால் போலீசில் பிடிபடாமல் இருந்தார். இந்நிலையில் கூடுதல் விலைக்கு, ௨௪ மணி நேரமும் மது விற்பதாக நிறைய புகார் போனது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் சென்றதால், பவானி போலீசார் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்தே, சந்து கடையில் மது விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement