புளியம்பட்டியில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு மூன்று மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானி-சாகர் வனப்பகுதியை ஒட்டிய நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்-களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் தமிழக விவ-சாயிகள் சங்கம் சார்பில், காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணர்வு பேரணி, புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்-தது. இதை தொடர்ந்து நடந்த மாநாட்டில்
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு-கோபால் கூறியதாவது:
யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் பயிர்-களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்கி கொல்லும் சம்பவம் அடிக்கடி
நடக்கிறது. காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டு கொல்ல அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் துயரத்தை எந்த அர-சியல் கட்சியும் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே வரும் சட்ட-சபை தேர்தலில், எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடுவ-தில்லை என கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement