புளியம்பட்டியில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு மூன்று மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானி-சாகர் வனப்பகுதியை ஒட்டிய நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்-களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் தமிழக விவ-சாயிகள் சங்கம் சார்பில், காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணர்வு பேரணி, புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்-தது. இதை தொடர்ந்து நடந்த மாநாட்டில்
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு-கோபால் கூறியதாவது:
யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் பயிர்-களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்கி கொல்லும் சம்பவம் அடிக்கடி
நடக்கிறது. காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டு கொல்ல அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் துயரத்தை எந்த அர-சியல் கட்சியும் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே வரும் சட்ட-சபை தேர்தலில், எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடுவ-தில்லை என கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
Advertisement
Advertisement