சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி
கரூர்: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, சுக்காலியூரில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதிகம் உள்ளன. மேலும், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து அத்திப்பாளையம், செட்டிப்பாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். ஆனால், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில், இரண்டு பக்கமும் உள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை.
கரூர் மாவட்டத்தில், வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் மழை வரும்போதும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளபோதும், பஸ்கள் வரும் வரை அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகும் அவல நிலை உள்ளது.எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூரில், இரண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நிழற்கூடம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்