ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை

அங்காரா: ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்' என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியது. ரஷ்யாவில் விமான நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்கு பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகள் துருக்கியில் உள்ள சிராகன் அரண்மனையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் போரில் கொல்லப்பட்ட 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன. நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார். துருக்கிய உளவுத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும்
-
எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"
-
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
-
ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்
-
எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி; தர்மபுரியில் அதிர்ச்சி
-
வேகமெடுக்கும் மனோன்மணியம் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை
-
இண்டி. கூட்டணிக்கு 'டாட்டா' காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு