இண்டி. கூட்டணிக்கு 'டாட்டா' காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி; இண்டி கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டோம், 2024 லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே கூட்டணியில் இணைந்தோம் என்று ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
@1brபஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள 16 கட்சிகள் பிரதமருக்கு கடிதமும் எழுதின.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் எழுதியது.
ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடியே பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடைபெறும், முன்னதாக கூட்டத்தொடர் கூடாது என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை மத்திய அரசு நிராகரித்தது.
இந் நிலையில் இண்டி கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகிவிட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது; திரைக்குப் பின்னால் தான் பா.ஜ., காங். இடையே கூட்டணி உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக நன்மை பயக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் செய்கிறார். அதற்கு பதிலாக, ராகுல், சோனியா குடும்பங்களை சிறைக்கு செல்வதில் இருந்து காப்பாற்றுகிறார்.
மக்களுக்குத் தேவையான கல்வி, இட ஒதுக்கீடு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நாட்டு மக்களுக்கு தருவதில் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. நாட்டின் அரசியலை சுத்தப்படுத்த, திரைக்கு பின்னால் கூட்டணி வைத்துள்ள இந்த கட்சிகளின் கூட்டுச்சதியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
ராகுல், மோடி இருவரும் மேடைகளில் வேண்டுமானால் எதிரிகளாக தோன்றலாம். அரசியலில் நீடிக்க இருவரும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உத்தரவாதம் அளிப்பவர்களாக மாறிவிட்டனர்.
காங்கிரசின் பலவீனமான அரசியல் பா.ஜ.,வை அதிகாரம் செய்கிறது. அதேநேரத்தில் பா.ஜ., ஆட்சி காங். ஊழலை மறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (29)
பேசும் தமிழன் - ,
05 ஜூன்,2025 - 11:48 Report Abuse

0
0
Reply
ramesh - chennai,இந்தியா
04 ஜூன்,2025 - 21:50 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
04 ஜூன்,2025 - 19:54 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
04 ஜூன்,2025 - 19:05 Report Abuse

0
0
Reply
Indhuindian - Chennai,இந்தியா
04 ஜூன்,2025 - 18:13 Report Abuse

0
0
Reply
Indhuindian - Chennai,இந்தியா
04 ஜூன்,2025 - 18:10 Report Abuse

0
0
Reply
Ramesh.M - Trivandrum,இந்தியா
04 ஜூன்,2025 - 17:32 Report Abuse

0
0
Abdul Rahim - ,இந்தியா
04 ஜூன்,2025 - 18:30Report Abuse

0
0
Reply
N Srinivasan - Chennai,இந்தியா
04 ஜூன்,2025 - 16:33 Report Abuse

0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
04 ஜூன்,2025 - 16:28 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
04 ஜூன்,2025 - 16:27 Report Abuse

0
0
Reply
மேலும் 18 கருத்துக்கள்...
மேலும்
-
இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
-
கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
-
போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை
-
'போதைப்பொருட்கள் தடுக்க ரெய்டு அதிகரிக்க வேண்டும்'
-
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
-
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement