வேகமெடுக்கும் மனோன்மணியம் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரைப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்லூரிகள் செயல்படுகின்றன.
மே 27ல் கல்லூரிகளில் பி.காம் மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் லா தேர்வு நடந்தது.
விடைத்தாள் கொடுத்து தேர்வு துவங்க இருந்த சில நிமிடங்களில் ஏற்கனவே வினாத்தாள் அவுட் ஆகிவிட்டதாக கூறி அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்கான மாற்றுத்தேர்வு மே 30ல் நடந்தது.
தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ் திருநெல்வேலி பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
பேட்டை போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், வினாத்தாள் கசிந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரைப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தெரிவித்துள்ளார்.
மேலும்
-
இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
-
கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
-
போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை
-
'போதைப்பொருட்கள் தடுக்க ரெய்டு அதிகரிக்க வேண்டும்'
-
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
-
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'