வங்கியில் ரூ.53 கோடி நகை கொள்ளை

விஜயபுரா : கர்நாடகாவில் உள்ள கனரா வங்கி கிளையில், 59 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி நேற்று அளித்த பேட்டி:
விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின், மனகோலியில் கனரா வங்கி கிளை உள்ளது. மே 25ம் தேதி நள்ளிரவு, அங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.
வங்கியில் அடமானம் வைத்திருந்த மற்றும் லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்த 59 கிலோ தங்க நகைகள், 5.20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்தது. நகைகளின் மதிப்பு 53.26 கோடி ரூபாய்.
வங்கி கொள்ளையில், ஆறு முதல் எட்டு பேர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை அடித்தபின், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்கை திருடி சென்றுள்ளனர்.
இவர்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையை திசைதிருப்ப வங்கி முன், மாந்த்ரீகம் நடந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, கருப்பு நிற உடை அணிந்த பொம்மை வைத்து பூஜை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்;எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி
-
ஊழல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற மக்கள் விருப்பம் ; பிரசாந்த் கிஷோர்
-
பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்
-
தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,
-
பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு